Tuesday, October 30, 2018

நமது பள்ளிகளிலும் வீடுகளிலும் உள்ள நீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நமது பள்ளிகளிலும் வீடுகளிலும் உள்ள நீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Panjabutha Sthalam

Panjabutha Sthalam






துணிபை

துணிபை

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம்

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம்


மரணம் புள்ளி விவரம்

மரணம் புள்ளி விவரம்

PVR CINEMAS Open their Biggest Multiplex In Chennai

PVR CINEMAS Open their Biggest Multiplex In Chennai

PVR CINEMAS Open their Biggest Multiplex In Chennai, 
With Their High End brand #PVRIcon ( PVR ICON ) At VR Chennai Mall, Anna Nagar West, Chennai. It’s One Of Their Biggest Properties In India - 10 Screens With 2594 Seats. They Become The Biggest Multiplex Chain In Tamil Nadu.

It's Open From Today ! Enjoy Cinema Lovers !

வள்ளலாரின் தனிச் சிறப்பு

வள்ளலாரின் தனிச் சிறப்பு :-


வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்.

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்.

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாதனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரம்ம் அமைத்து கொள்ளமாட்டார்.

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்.

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்.

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்.

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்.

சத்தம் போட்டு பேசமாட்டார்.

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்.

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்.

புலால் உண்பதை  ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர். வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் #வாடியவர்.

#ஜீவ காருண்யமே கடவுள் #வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் #திறவு கோல் கிடைக்கும் என்றவர்.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க்க் கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்.

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர்.

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சி பயிற்சி,  வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம்  என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்  போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார் தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே  கண்டவர்

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை  போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய  ஞானசபை தோற்றுவித்தவர்.

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்.

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான திருஅருட்பாவைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்.

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது.

Tuesday, October 16, 2018

வீட்டு மாடியில் குடிநீர் டேங்க் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இக்காணொளியைப் பார்க்கவும்

வீட்டு மாடியில் குடிநீர் டேங்க் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இக்காணொளியைப் பார்க்கவும்


70% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் 300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே(Generic Medical Shop)

76, karaikattu street, thiruvarur. GRM SCHOOL ROAD. மக்கள் மெடிக்கல் திறக்கப்பட்டுள்ளது இங்கு மருந்து 70% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் 300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் மக்கள் மருந்தகம்

இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.

(எ.கா) மற்ற மெடிக்கல்களில்
ரூ.1500க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே வரும்.

சர்க்கரை, இரத்தஅழுத்தம்,
இருதயம்,கொழுப்பு, அலர்ஜி, போன்ற
நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.



தொடர்புக்கு:
மக்கள் மருந்தகம், Mobile : 9500588110

மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது.
ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது.
இதை மாற்றவே
மக்கள் மருந்தகங்கள்.

அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும்
SHARE பகிர்ந்து அனைத்து தரப்பினர்க்கும் சென்றடைய உதவுங்கள் 🙏





மக்கள் மருந்தகம்,

 மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்  JAN AUSHADHI MEDICAL STORE  Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை  மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்   அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மத்திய அரசு மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு:9500588110, 04366-223733.

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
EX
1 GLYCOMET GP 1. - 10 மாத்திரை  விலை ₹7
2 GLYCOMET GP 2  -10 மாத்திரை  விலை  ₹12
3 GEMER  2       - 10 மாத்திரை  விலை  ₹12
4 ATORVA 10.    -10 மாத்திரை  விலை ₹5
5 ATORVA 20.    - 10 மாத்திரை  விலை ₹10
6 GLYCINORM M80- 15மாத்திரை  விலை ₹32
7 GULCORED FORT -10 மாத்திரை  விலை ₹11
8 PAN D     -10 மாத்திரை  விலை ₹19
9 SHELCAL- 10 மாத்திரை  விலை₹12
10 ATORLIP F- 15மாத்திரை  விலை₹30
11

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...

சிறியதொரு தெலுங்கு நாடகம். மாமியாரை விரட்டி அடிக்கும் மருமகள். கலங்கும் மகன்.. அனைவருக்கும் புரியும். கண் கலங்க வைத்து விட்டான் மகனாக நடித்த பையன். மூவரும் சிறப்பாக செய்துள்ளனர். Super.

சிறியதொரு தெலுங்கு நாடகம்.
மாமியாரை விரட்டி அடிக்கும் மருமகள். கலங்கும் மகன்..
 அனைவருக்கும் புரியும். கண் கலங்க வைத்து விட்டான் மகனாக நடித்த பையன். மூவரும் சிறப்பாக செய்துள்ளனர். Super.


படித்ததில் பிடித்தது

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!!

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!

- படித்ததில் பிடித்தது .

கண்கள் காட்டும் மன ஓட்டம்

கண்கள் காட்டும் மன ஓட்டம்

1). கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2). கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.

5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,
ஆசைப்படுகிறது.

6). கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.

7). கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8). கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

9). கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10). கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.

11). கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

12). கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13). கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

14). கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

15). கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16). கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

17). கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

18). கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

19). கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.

20). கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.

21). கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

22). கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

23). கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.

24). கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25). கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

26). கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.

27). கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.

28). ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை.

29). இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.

30). கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.

👁👁👁👁👁👁👁👁👁

Monday, October 15, 2018

Beautiful Message written in arabic language

Beautiful Message written in arabic language

Beautiful Message written in arabic language

அரபு மொழியில் காணப்பட்ட
அற்புதமான மகாவாக்கியங்கள்.
      لكن 
تذكر  ان  ما تصنعه  الْيوم  لنف jbسك  ستكسبه في  الغد  سالبا  او  موجبا 
لكن  تذكر  أيضا  ان  الحياة  عبر  
قال تعالى 
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال 
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا
A rich man looked through his window and saw a poor man picking something from his dustbin ... He said, Thank GOD I'm not poor;

தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً؛
 
The poor man looked around and saw a naked man misbehaving on the street ... He said, Thank GOD I'm not mad;

தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்:
"இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை".

نظر الرجل المسكين حوله وشاهد رجُلاً عارياً يُسِيء السلوك في الشارع وقال الحَمْدُ لله أني لسْتُ بِمَجْنُون؛

The mad man looked ahead and saw an ambulance carrying a patient ... He said, Thank GOD am not sick;

தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை".

نظر الرجل المجنون إلى الأمام ورأى سيارة إسعاف تَقِلُ مَرِيضًا وقال الحمد لله أَنِي لسْتُ مَرِيضًا؛

Then a sick person in hospital saw a trolley taking a dead body to the mortuary ... He said, Thank GOD I'm not dead;

நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து அரற்றினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை".

ومِن ثُم رأى مَرِيضٌ في المُستشْفَى عربةً تَنْقِل جثةً إلى المشرحة فَحَمَد الله وشَكَرَهُ أنه لا يزال حيٌ يُرْزَق؛

Only a dead person cannot thank God;

இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்.

المَوتَى هُمْ وَحْدَهُم الذين لا يَستطِيعوُن الكلام وشُكْر الله؛

Why don't you thank GOD today for all your blessings and for the gift of life ... for another beautiful day;

இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது?

فبما أنك لازلت حياً تُرْزَق فلماذا لا تبادر بِشُكْر المَوْلَى عَزَّ وجَلْ على مَنِّهِ وكَرَمهِ وفَضْلِهِ وعلى هبة الحياة ومَنْحِك يوم آخَر جَمِيل؛

What is LIFE?
To understand life better, you have to go to 3 locations:

வாழ்க்கை என்பது என்ன?
தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்.

ماهي الحياة؟
لكي تفهم معنى الحياة،   بصورةٍ أفضل، عليك بالتوجه إلى ٣ أماكن:

1. Hospital
2. Prison
3. Cemetery

1. மருத்துவமனை
2. ஜெயில்
3.  சுடுகாடு.
١. المستشفى
٢. السجن
*٣. المقبرة

At the Hospital, you will understand that nothing is more beautiful than HEALTH.

ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை புரியவைக்கும்.

في المستشفى سَتُدْرِك أن  لا شيئ يضاهي نِعْمَة الصِحَة والعافِيَة

 In the Prison, you'll see that FREEDOM is the most precious thing

சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை ஜெயில் புரியவைக்கும்.

وفي السجن سَتَعْلَم  أن الحرية لا تُقَدَر بِثَمَن

 At the Cemetery, you will realize that life is worth nothing. The ground that we walk today will be our roof tomorrow.

உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு புரியவைக்கும். எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.

في المَقبَرَة، سَتُدْرِك أن الحياة لا تُساوِي شيئاً وأن الأرض التي نمْشِى عليها اليوم وستكون السقف الذِي نلتَحِف به غدا؛ 

Sad Truth* :  We all come with Nothing and we will go with Nothing ... Let us, therefore, remain humble and be thankful & grateful to God at all times for everything.

உயிர்ப்பான உண்மை:

வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை.
போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை.
எனவே
 இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். 🙏🙏🙏

எனக்கு வந்து நான் சிரிச்சதால், உங்களுக்கு அனுப்பி ரசிக்கிறேன்

முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவை!!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

ரேஷன் கார்டு photo  15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது!
ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சி எங்களை அடிச்சிக்க முடியாது!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்!
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்!!
 😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

நாம் அழுதால் நமக்கே பிடிக்காது!
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க!
ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!! பொண்டாட்டிங்க திட்டியே கொல்லும்!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி  இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா, பிரச்சனை  Flight ஏறி வருது😒😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்!
இல்ல, முடி விழும்!! அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

காந்தி நாட்டுக்காக பாடு பட்டார்!
நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க! ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல! நமக்கு புடிச்சா நல்லவங்க!! புடிக்கலனா கெட்டவங்க!!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும்😁  புரிதா😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

எனக்கு வந்து நான் சிரிச்சதால், உங்களுக்கு அனுப்பி ரசிக்கிறேன்.😊

சிரிக்க மட்டுமே..!!

சிரிக்க மட்டுமே..!!

சிரிக்க மட்டுமே..!!

கணவன் : உன் பெயர் என்ன.?
மனைவி : என்ன, தெரியாத மாதிரி கேட்கறீங்க?
கணவன் : பரவால சொல்லு..
மனைவி : தங்கம்.....ஏன்?
கணவன் : இனி என்னால உன்ன என் கூட வச்சுக்க முடியாது...
மனைவி : ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?
கணவன் : கவர்மென்ட் அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க.... நீ 68 கிலோ இருக்கயே..
மனைவி : ஆமாங்க நானும் உங்கள என் கூட இனி வச்சுக்க முடியாது போல
கணவன் : என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு.....?
மனைவி : ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... கவர்மென்ட் தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிருக்காங்களே, என்ன புடுச்சி குடுத்தரலாமா????
கணவன் : !!!!!!!!!!
மனைவி : யார்கிட்ட...??

மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார் : பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
மாப்பிள்ளை வீட்டார் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
(சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.)
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.
வா‌த்‌‌தியா‌ர் : ????

பொன்மொழிகள்..!!

👍 நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்..

👍 நாம் வாழும் போது யாரை அழுக வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்..

👍 உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!!

சிந்திக்க வைக்கும் வரிகள்..!!

👌 ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர் தான் Faith..

👌 குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை ஆனால் அதற்கு பயப்படாமல் அவனைப் பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர் தான் Trust..

👌 ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம் நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கிறோம் அதற்கு பெயர் தான் Hope..

👌 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் Confidence..

👌 உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர் தான் Over confidence...

குசா தோப்புக் கரணம்

குசா தோப்புக் கரணம்

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும்.

வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும்.

இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம்.

குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம்.

உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை.

ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும்.

இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது.

வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே.

உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம்.

இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள்.

ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும்.

சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம்.

பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம்.

சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும்.

பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு

இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு

ஒரு சிறிய கதை;

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

' என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

" உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..."

" சரி. அதுக்கென்ன இப்போ ?"

" அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ."

வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.

நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்...

அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா ? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக் கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்."

' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும் ! தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .

அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

" உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.

" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !"

அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

" ராகவா ! நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்....அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

" சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து
நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே !

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.

''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

" என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா ?"

' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

" கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது ! "

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?  அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்  கூட காப்பாத்த முடியலையோ?

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?

தற்போது சற்று சிந்திப்போம்👇

பெற்றோரை பேணுவதை பற்றி இந்த மகாளய பட்சத்தில் புண்ணியம் வேண்டி மூதாதையரை  நினைவு கூரும் நாம் சிறிது சிந்திக்க வேண்டும்.

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு அடுத்து என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே. பிள்ளையைக் கருவுற்ற காலத்திலிருந்து கடைசிக் காலம் வரைக் காப்பாற்றும் பெற்றோர்களை இந்தியாவில் எங்கும் காண முடியும்.

இன்று நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது. அன்னையர் தினம் மறந்து விடுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன் கடந்த காலத்தை மறக்கிறோம்; பெற்றவர்களை புறக்கணிக்கிறோம். எதற்காக வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி தெரியாமல் இயந்திரங்களுடன் இயந்திரத்தனமாய் வாழ்கிறோம். காலத்தின் கட்டாயத்தால் பெற்றவர்களை பிரிய வேண்டி சூழ்நிலையோ அல்லது ஒதுக்க வேண்டி நிலையோ உருவாகும் போது அவர்கள் உணர்வுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதில் நமக்கு அக்கறையும் இல்லை.

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.
ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா? இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:


படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...


சம்பவம்-1 👇👇👇👇👇👇


24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..


மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"


அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.


ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....


மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.


"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்...


இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்


"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"


 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்...


"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...


என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.


சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.


'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.


சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇


ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..


 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....


தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...


பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..


தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...


உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....


நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..


அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.


அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.


நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.


எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..


மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.


சம்பவம்-3  👇👇👇👇👇👇


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.


வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."


 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""


 "ஐந்து ரூபாய்"


ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.


மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"


"இல்லம்மா வராதும்மா"


அதெல்லாம் முடியாது.


 மூன்று ரூபாய் தான்


பேரம் பேசுகிறாள் அந்த தாய்.


பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு


"மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா" என்கிறாள்"


முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.


கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு


"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.


"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"


இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்"


"சரி. இரு இதோ வர்றேன்." என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..


திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"


என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.


எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..


"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா.....?


என்று கேட்கஅதற்கு அந்த தாய்,


"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.


இது தான் உண்மையில் மனித நேயம் ......


சம்பவம் 4 👇👇👇👇👇👇👇


 மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.


வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.


சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்...


 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.


கணவர் வேகமாக ஓடினார்.


கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.


மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.


அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...


 இருட்டில் எதுவும் தெரியவில்லை.


மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...


தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.


கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.


அவளுக்கு அழுகையாய் வந்தது.


இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.


மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.


பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.


ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...


 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.


அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.


சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்...


ஆனால்


உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.


தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.


வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.


தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.


இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?


நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.


 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.


வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.


எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.


வாய்ப்புகளை கொடுத்தும், வாய்ப்புகளில் சரியானதை தேர்ந்தெடுத்தும்  வாழ கற்றுக் கொள்ள வேண்டும்👍👍👍👍

படித்ததில் பிடித்ததாய் பகிர்கின்றேன்

தாமஸ் எடிசன்

தாமஸ் எடிசன்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

மதுரையிலேயே  பஞ்சபூதத் தலங்கள்

மதுரையிலேயே

பஞ்சபூதத் தலங்கள்

உள்ளதை நம்மில் பலபேர்

அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆம் ""

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை ஊதா பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

.அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

நல்ல பதிவுகளை பகிர்வோம்
🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹
🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉

சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.

ஒரு பெண்மணி கேட்டார்.!

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று?

அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:

முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது காடுகளுக்கு செல்லும் வழி என்பது  முன்னோர்கள் சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.

இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.

இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்
பாம்புகள், பாப்பிராண்டிகள்,
உடும்புகள், ஓணான்கள்,
கோழிகள், குருவிகள்
அலுங்குகள், ஆமைகள்
இப்படி பல உயிர்களும்
இவற்றை உணவாக கொள்ள
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,
கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,
மூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)
இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்
ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.

இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள்  பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.

பாம்புகள், ஆந்தைகள்  எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.

பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.

"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."

ஆனால்
இன்று .....???

விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.

இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.

அதில் முக்கியமானது குள்ளநரிகள்.
இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.

இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.

" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."

கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.

மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.

இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

பகிர்வு

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

#யாஷி #பிரசாத்
#ஹிப்னோதெரபிஸ்ட்
9791305175

தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் தயவு செய்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்ல வேண்டாம் அன்பு உறவுகளே!

தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் தயவு செய்து  இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்ல வேண்டாம்  அன்பு உறவுகளே!

156 கோடி தங்க கார்

156 கோடி தங்க கார்

🙏🏻👍🏼156 கோடி தங்க கார்.வாழ்க்கையில் பார்க்க முடியுமானு தெரியல, ஒருமுறை பார்த்துக் கொள்வோம் 🤣🤣🤣🤩🙂

தாமிரபரணி புஷ்கரிணி

தாமிரபரணி புஷ்கரிணி

தமிழகத்திலையே உற்பத்தியாகி
தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது...
ஆம் தாமிரபரணி மஹா புஷ்கரிணி...

இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள்...

இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும்..
ஊர்மக்கள் சார்பாகவும்,
கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும்..
தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும்,
புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள்...

தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி,
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது..

100 க்கும் மேற்பட்ட படித்துறைகளில் பக்தர்கள் புண்ணிய நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது..

அவற்றில் சில குறிப்பிட்ட இடங்கள்

பாபநாசம்,
கல்லிடைக்குறிச்சி, (அம்பாசமுத்திரம்)
முக்கூடல்,
திருநெல்வேலி,
அருவங்குளம்,
சீவலப்பேரி,
முறப்பநாடு,
அகரம்,(வல்லநாடு)
ஆழிகுடி,
கருங்குளம்,
ஸ்ரீவைகுண்டம்,
ஆழ்வார்திருநகரி,
குரங்கனி,
ஏரல்,
ஆத்தூர்,
சேர்ந்தபூமங்கலம்,
புன்னக்காயல்.

பாபநாசம் தாமிரபரணி நதியின் பிறப்பிடமாகும்,
அகத்தியர் அருளிய மலை வாசஸ்தலம்..

அருவங்குளம்
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது..
ஏற்கனவே இவ்விடம் ஜடாயு தீர்த்தம் என புகழ் பெற்றது..
இவ்விடம் திருநெல்வேலி அருகில் திருநெல்வேலி அவுட்டர் பைபாஸ் ரோட்டில் நாரணம்மாள்புரம் அருகில் உள்ளது...

சீவலப்பேரி
இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது..
இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும்
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலையே அமைந்துள்ளது..
இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..

முறப்பநாடு
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது..
மேலும்
இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது..
இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார்..
குருபெயர்ச்சிக்காக தான் இத்தாமிரபரணி புஷ்கரணி நடைபெறுவதால் இத்தலத்தின் முன்பாக உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடி குருவையே நேரடியாக வணங்கிக்கொள்ளலாம்..
இவ்விடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும்,
திருநெல்வேலியிலிருந்து இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது..

ஆழ்வார்திருநகரி
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிநாதன் திருக்கோவில் உள்ளது,
நம்மாழ்வார் இங்கே தான் அவதரித்தார்..
இந்த கோவிலும் குரு ஸ்தலமாக தான் விளங்குகிறது..
எப்படியெனில், பிரம்மாவுக்காக பெருமாள் இங்கே குருவாக அவதாரம் எடுத்தார்..

முறப்பநாடு குரு ஸ்தலத்திற்கும்
ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு எனில்..
முறப்பநாட்டில் சிவன் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது,
ஆழ்வார்திருநகரியில் பெருமாள் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது...

இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அடுத்து இருக்கிறது...
இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது...

இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நீராட வேண்டும் என்று கட்டாயமில்லை,
தாமிரபரணி நதியில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம்...
வாருங்கள் வரவேற்கிறோம்...

நாள்: 12-10-2018 முதல்
            23-10.2018 வரை..

இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்..
எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விபரத்தையும் காணுங்கள்..
அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்--15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்

முடிந்தால் இந்த 12 நாட்களுமே நீராடலாம்...
அது பெரும் புண்ணியமாகும்...

வாருங்கள் வரவேற்கிறோம்...
🙏🙏🙏🙏🙏

Tuesday, October 9, 2018

நரசிம்மர் சயனக் கோலம்

நரசிம்மர் சயனக் கோலம்

பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலக் காட்சியை இக் கோயிலில் மட்டுமே காணலாம்.

திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
## ஜெயஸ்ரீ நரசிம்மா ##

வீணை ஆஞ்சநேயர் - மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்

வீணை ஆஞ்சநேயர் - மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்

சிவபெருமான் திருநடனம் புரிந்த மப்பேடு சிங்கீஸ்வரர்  ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் (https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/03/02080636/1148469/singeeswarar-temple-mappedu.vpf)

Location - Singeeswarar Temple
Arakkonam Highway, Mappedu, Tamil Nadu 631402
094449 43644

https://maps.google.com/?cid=2743908555557456963

சுந்தரருக்கு உபதேசம் செய்த சிவன்

சுந்தரருக்கு உபதேசம் செய்த சிவன்


சிவபெருமான் சுந்தரருக்கு குருவாக இருந்து தவ நெறி உபதேசம் செய்த தலம் இது.

பண்ருட்டிக்கு வடக்கே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்துறையூர் கிராமம். இவ்வூரின் நடுவில் தான் சிவலோகநாயகி சமேதராய் வீற்றிருக்கிறார் சிஷ்ட குருநாதேஸ்வரர்.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடந்தபோது தேவர்கள் எல்லாம் திரண்டதால் உலகை சமநிலைப்படுத்த சிவனால் அனுப்பப்பட்ட அகத்தியரால் திருமணத்தைக் காண இயலவில்லை. அந்த மனக்குறையைப் போக்க திருத்துறையூரில் சிவனும் பார்வதியும் காட்சிகொடுத்த இடமே இப்போது சிஷ்ட குருநாதர் திருத்தலமாக விளங்குகிறது.

ஒருமுறை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூர் பெருமானைத் தரிசிப்பதற்காக வந்தார். வழியில் பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அப்போது, ஒரு வயதான தம்பதி, சுந்தரரை படகில் ஏற்றி அக்கரையில் கொண்டுவந்து இறக்கிவிட்டு மாயமாக மறைந்தனர்.

அப்போது, சிவபெருமானும் பார்வதி தேவியும் தம்பதியராய் சுந்தரர் முன்தோன்றி, ரிஷப வாகனத்தில் அமர்ந்து சுந்தரருக்கு காட்சி கொடுத்தனர்.

அருணந்தி முக்தியடைந்த இடம்

இதைக் கண்டு மெய்சிலிர்த்த சுந்தரர், சிவபெருமானை தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் அப்படியே உபதேசம் செய்தார். இதிலிருந்துதான் திருத்துறையூர் ஈசன் சிஷ்ட குருநாதேஸ்வரர் ஆனார்.

சிவஞான சித்தியார் என்னும் சரித்திர நூலை இயற்றிய அருணந்தி சிவாச்சாரியார் முக்தியான இடம் திருத்துறையூர். இவர் மெய்கண்டாருக்குக் குருவாக இருந்தவர் என்பதால் திருத்துறையூரில் சிவபெருமான், அருணந்தி சிவாச்சாரியார் என இரண்டு குருக்கள் இருப் பது தனிச்சிறப்பு.

இது குருஸ்தலம் என்பதால் இங்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி சிறக்கும் என்பதோடு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த இடம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது (https://tamil.thehindu.com/society/spirituality/சுந்தரருக்கு-உபதேசம்-செய்த-சிவன்/article8619538.ece)

பொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

பொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

பொன்விளைந்த களத்தூர் என்னும் திருத்தலம் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். அபிமான ஸ்தலம். ஸ்வாமி தேசிகன் யாத்திரையாக திருவஹீந்திபுரம் செல்லும் வழியில் களத்தூரில் தங்கியிருந்தார். அவர் ஆராதிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதும் அவர் வழக்கம். களத்தூருக்கு வந்த அன்று, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ண எதுவும் கிடைக்காததால், தீர்த்தத்தையே நிவேதனம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார். அன்று இரவு அந்த ஊர் நிலங்களை ஒரு வெள்ளைக் குதிரை மேய்ந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைத் துரத்த, அந்தக் குதிரை, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த ஸ்வாமி தேசிகனிடம், ஊர் மக்கள் குதிரை மேய்ந்த விஷயத்தைக் கூற, ஸ்வாமி தேசிகனுக்கு அது சாதாரணக் குதிரை அல்ல, சாக்ஷாத்  ஹயக்ரீவரே என்று புரிந்தது. உடனே நிலத்துக்குச் சென்று பார்த்ததில் அந்தக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொன்மணிகள் விளைந்திருப்பதைக் கண்டார். மக்களிடம் இவையனைத்தும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கிக்கூறி பின்னர் ஸ்வாமி தேசிகன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது வரலாறு. வயலில் (களத்தில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தலவரலாறு.

ஐந்தருவி சித்தர்

ஐந்தருவி சித்தர்

ஐந்தருவி சித்தர் - எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.

ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம். மேலும் விவரங்களுக்கு 👇🏼👇🏼


Google Analytics Alternative